பூன் லே டிரைவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இருவரை ஆயுதங்களால் காயப்படுத்திய தொடர்பில் இருவரை தேடும் வேட்டை நடந்து வருவதாக இன்று (ஏப். 7) போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 5.02 மணியளவில் பிளாக் 175 பூன் லே டிரைவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் CNAவிடம் தெரிவித்தனர்.
இதில் 22 மற்றும் 23 வயதுடைய இருவரை, மற்றொரு இரண்டு பேர் ஆயுதங்களால் காயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இருவரும் இதில் பாதிக்கப்பட்ட மற்ற இருவருக்கும் தெரிந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
“இதில் சம்பந்தப்பட்ட இருவரைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலதிக போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
தண்டனை காலம் முடிந்தாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை சிறை!