சிங்கப்பூர்: ஹௌகாங்கில் நேற்று முன்தினம் செப்., 1ம் தேதி இரவு பயங்கர விபத்து ஏற்பட்டது. Buangkok Green பகுதியில் மோட்டார் சைக்கிளும் லாரியும் மோதிக்கொண்டன.
அதனை அடுத்து, 45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்தார்.
அன்று இரவு 7:51 மணிக்கு விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் மதர்ஷிப்பிடம் தெரிவித்தனர்.
இறந்த அந்த அந்த நபர் டெலிவரி வாகன ஓட்டுநர் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 54 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மயங்கி விழுந்த நபர்.. விரைந்து சென்று உதவிய மருத்துவர் – நெட்டிசன்கள் “கிரேட் டாக்டர்” என பாராட்டு