கட்டடத் துறை ஊழியர்கள் காலத்திற்க்கு ஏற்ப அவர்களை மெருகேற்றிக் கொள்ளும் வகையில் புதிய பயிற்சி ஏற்பாடுகளை சிங்கப்பூர் வழங்கவுள்ளது.
அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் தங்களை தரம் உயர்த்தி கொள்ளவும் இது உதவும் என கருதப்படுகிறது.
சிங்கப்பூர் TOTO லாட்டரியில் ChatGPT பயன்படுத்தி வென்று ஆச்சரியப்படுத்திய ஆடவர்
கட்டடத் துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு விரைவில் தொழிற்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
அதனால் இயந்திரவியல் மற்றும் தானியக்க தொடர்பான தொழிற்நுட்பம் ஆகியவற்றை அவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
இதனால் அவர்களின் தரம் உயரும், சம்பளமும் உயரலாம் என சொல்லப்படுகிறது.
மேலும், பணியிடை மாற்றம் விரும்பும் ஊழியர்களும் நல்ல சம்பளத்துடன் பணி மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்படலாம்.
இந்த பயிற்சி ஜூன் மாதம் தொடங்கும், 3 ஆண்டுகளில் சுமார் 30000 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.