புக்கிட் மேரா வியூ சந்தை இரண்டு வாரங்களுக்கு பின் மீண்டும் திறப்பு.!

Bukit Merah View Reopen
Pic: Google Street view

சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக மூடப்பட்டிருந்த புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம் நேற்று (27-06-2021) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்தில் நேற்று மக்கள் கூட்டம் அதிகளவில் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. சுமார் 60 கடைகள் உள்ள உணவங்காடி நிலையத்தில் நேற்று காலை 3 கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் அதிரடி சலுகைகள்!

புக்கிட் மேரா வியூ சந்தையின் மேலும் சில கடைகள் சுத்தம் செய்யும் பணிகளுக்காக பின்னர் திறக்கப்பட்டன என்றும், பெரும்பாலான கடைக்காரர்கள் நேற்று நண்பகல் 12 மணிக்கு தங்களின் தனிமைப்படுத்தப்படும் உத்தரவை முடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்துடன் 89 கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இது சிங்கப்பூரில் தற்போது உள்ள ஆகப்பெரிய கிருமித்தொற்று குழுமம் ஆகும்.

புக்கிட் மேரா வியூ குழுமத்துடன் தொடர்புடையவர்களில் சுமார் 50 விழுக்காட்டினர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டுள்ளன.

சிங்கப்பூரில் இந்த குறிப்பிட்ட பிளாக்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!