போக்குவரத்து சிங்னல் இல்லாதபோது சாலையை கடந்த மூதாட்டி – நூலிழையில் தப்பிய காணொளி

Stomp

சிங்கப்பூரில் வயதான பாதசாரி ஒருவர், போக்குவரத்து சிங்னல் சாதகமாக இல்லாதபோது சாலையைக் கடந்தது, வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 10) காலை 11.25 மணியளவில் புக்கிட் பஞ்சாங்கில் உள்ள பெடிர் சாலை (Petir Road) மற்றும் கேசிவ் சாலை (Cashew Road) சந்திப்பில் நடந்தது.

சர்வதேச பயணிகளுக்கு எல்லைகளை மீண்டும் திறக்க உள்ள மலேசியா

ஸ்டோம்பர் இத்ரிஸ் என்பவர் அந்த வயதான பெண் சாலையை கடந்த காணொளிகளை பகிர்ந்துள்ளார்.

மூதாட்டி சாலையைக் கடக்கும்போது அவர் காரில் மோதாமல் நூலிழையில் தப்பித்ததாக அவர் கூறியுள்ளார்.

சாலையைக் கடக்கும்போது தேவையான நெறிமுறைகள் பற்றி மூத்த குடிமக்களுக்கு கற்பிப்பதில் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்