20 பேருடன் சென்ற பேருந்து… 15 பேர் சிங்கப்பூர் பயணிகள்: லாரி – பேருந்து மோதி விபத்து

ANGKATAN PERTAHANAN AWAM MALAYSIA/FACEBOOK

ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் (Genting Highlands) அருகே கடந்த புதன்கிழமை (ஜூலை 13) காலை சுற்றுலா பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனை அடுத்து, விபத்தில் சிக்கிய 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் ஊழியர் மரணம்; தொடர் மரணம்… அச்சத்தில் உறையும் வெளிநாட்டு ஊழியர்கள்

மொத்தம் 20 பேருடன் பயணித்த பேருந்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் சிங்கப்பூரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதில் இரண்டு சிங்கப்பூர் பயணிகளும் மலேசிய ஓட்டுநரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், இரண்டு சிங்கப்பூர் பயணிகள் வீடு திரும்பியதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து உறவினர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத மிரட்டல் அதிகம்… அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்