சாலையை விட்டு விலகி பாதசாரிகளின் நடைபாதையில் சீறிப்பாய்ந்த கார் – இருவர் காயம்

AFP

கிளெமெண்டி அவென்யூ 2 மற்றும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் இன்று வியாழன் (டிசம்பர் 9) காலை மேற்குறிப்பிட்ட இடத்தில் நடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட உமிழ்நீர் ART கருவி – PCR சோதனையைப் போலவே துல்லியமானது!

அந்த கார், சாலையை விட்டு விலகி பாதசாரிகளின் நடைபாதையின் மேலே மோதி விபத்துக்குள்ளானது.

காலை 8.35 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

அவர்கள் இருவரையும் SCDF துணை மருத்துர்கள் சோதனை செய்தனர், அதன் பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஐந்து நோய்த்தொற்று பதிவு