சோவா சூ காங் நார்த் 5ல் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) அதிகாலை நடந்த சம்பவத்தில் கார் ஒன்று விளக்கு கம்பத்தில் மோதியது.
விபத்துக்குள்ளான இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் ஸ்டாம்ப் வாசகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
அதில் விளக்கு கம்பம் வளைந்த நிலையிலும், காரின் முன்பகுதி உடைந்தும் காணப்படுகிறது.
இந்த விபத்து குறித்து நள்ளிரவு 12.23 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடூரமாக தீப்பிடித்து எரிந்த கார் – ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி மரணம்!