சிலேத்தர் விமான நிலையத்திற்கு அருகே கடந்த திங்களன்று கட்டுமான தடுப்பு மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்த 46 வயதான ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடனை அடைக்க வேண்டி தன் சிறுநீரகத்தை S$10,600க்கு விற்ற வெளிநாட்டு நபர் – வாங்கியவர் சிங்கப்பூரர்
பொங்கோல் பராட் டிரைவில் அதிகாலை 3.15 மணியளவில் விபத்து குறித்து தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் கார் சறுக்கி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது, இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின.
சுயநினைவில் இருந்த ஓட்டுனரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கொண்டு சென்றது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்