Singapore: யிஷுனில் நடந்த விபத்தில் கார் பேருந்துடன் மோதியதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய ஏழு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டிடத்தின் விளிம்பில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் – தடுமாறி கீழே விழுந்து மரணம்
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து யிஷுன் அவென்யூ 2ல், கான்பரா மற்றும் யிஷுன் அவென்யூ 3 சந்திப்பை நோக்கிய சாலையில் நிகழ்ந்தது. சம்பவம் குறித்து இரவு 10.50 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் 31 வயதுடைய கார் ஓட்டுநர் சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய ஏழு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.
சிறப்பு திறன் கொண்ட COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவாதம் ஏற்படுமா? – MOH விளக்கம்