உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகவும், அதிநவீன வசதிகளுடன் கூடிய விமான நிலையமாகவும் விளங்குகிறது சாங்கி சர்வதேச விமான நிலையம் (Changi International Airport). இந்த விமான நிலையத்தில் நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றனர். அதிகளவிலான பயணிகளை கையாண்டு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் சாதனையும் படைத்துள்ளது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி!
தென் கிழக்கு ஆசியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகவும், ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு இந்த விமான நிலையம் ‘HUB’ ஆக விளங்குகிறது.
இந்த நிலையில், சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2- ல் புதிதாக மெக்டொனால்ட்ஸ் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் நாள்தோறும் காலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50- க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவருந்து வகையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
முன் உறுப்பில் கை வைத்து பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டு நபர் கைது
மெக்டொனால்ட்ஸ் உணவகம் திறக்கப்பட்ட முதல் நாளே வாடிக்கையாளர்கள் குவிந்ததால், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
இதே முனையத்தில் இருந்த மெக்டொனால்ட்ஸ் உணவகம் (McDonald’s), கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.