Singapore Changi Airport: சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 இன் வடக்கு பகுதி வரும் அக்டோபரில் மீண்டும் செயல்பட தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக நடந்து வரும் இந்த பணி, திட்டமிடப்பட்டதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு பெற்று மீண்டு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் சாங்கி விமான நிலையத்தின் மொத்த பயணிகளின் திறன் ஆண்டுக்கு 85 மில்லியனில் இருந்து 90 மில்லியனாக அதிகரிக்கும்.
தற்போது ஆண்டுக்கு சுமார் 70 மில்லியன் பயணிகள் வந்து செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
முனையத்தின் தெற்கு பகுதி கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.