சென்னையில் பேயாட்டம் ஆடிய கனமழை: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாதிப்பு

(Photo: Indian Express)

சென்னையில் இரண்டு நாட்களில் கனமழை வெளுத்து வாங்கி சாலைகளை ஸ்தம்பிக்க செய்தது.

இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை நாம் காணொளிகளில் பார்த்திருப்போம்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சண்டை: மரப்பலகையால் தாக்கியதில் ஒருவர் மரணம் – சந்தேக நபர் கைது

இதனால் பயணிகள் விமான நிலையம் செல்வதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது, அவர்களோடு மட்டுமல்லாமல் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமானிகள் முதற்கொண்டு இதில் பாதிக்கப்பட்டனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

அதாவது சுமார் 20 விமானங்கள், ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.

குறிப்பாக சொல்லப்போனால், சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் ஆகிய 7 சர்வதேச விமானங்களும் இதில் தாமதமாக சென்றது.

இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்