சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளுக்கு லக்கேஜில் இனிப்புகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பாங்காக் செல்வதற்காக கடந்த வாரம் நான்கு பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பண நோட்டுகளை மறைத்து வைத்து குறிப்பு கொடுக்கும் டிக்டாக் பயனர்
அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, பயணிகள் இனிப்பு பெட்டிகளை எடுத்துச் செல்வதை கண்டறிந்தனர்.
மேலும் விமானத்திற்குள் இனிப்பு பண்டங்களை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் பயணிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அதோடு கோவில் பிரசாதங்கள், லட்டுகள் போன்ற பொருட்களுக்கும் தடை விதிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் என்பதால் இனிப்புகளை எடுத்துச் செல்வதாக அவர்கள் அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க முயன்றனர், ஆனால் அதிகாரிகள் இனிப்புகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
பின்னர் அவர்கள் அந்த பயணத்தை ரத்து செய்தனர். ஆனால், நான்கு பயணிகளும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானத்தில் மும்பைக்கு பயணித்து அங்கிருந்து இனிப்பு பெட்டிகளுடன் பாங்காக் சென்றுள்ளனர். அவற்றை மும்பை சுங்கத்துறையினர் தடுக்கவில்லை.
இதேபோல், இலங்கை செல்லும் பயணிகளுக்கு ஆடைகள், லுங்கிகள் மற்றும் காட்டன் புடவைகளை எடுத்துச் செல்ல சென்னை விமான நிலைய சுங்கத்துறை அனுமதி கொடுப்பதில்லை.
ஆனாலும், திருச்சி, பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் இலங்கை பயணிகளுக்கு அவைகள் அனுமதிக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, அரசின் விதிமுறைகளை மட்டுமே சென்னை விமான நிலையம் பின்பற்றுவதாகவும், நாட்டின் பிற விமான நிலையங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்