சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம் (Air India). இதில் ஒரு விமான சேவை மட்டும் நேரடி விமான சேவை என்ற போதிலும், மற்ற விமான சேவைகள் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை வழியாக சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
பூங்காவில் மரக்கன்றை நட்டு வைத்த இந்திய தூதர்!
இந்த வழித்தடத்தில் தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை, சிங்கப்பூர் இடையேயான நவம்பர், டிசம்பர், அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.