ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இருமார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இதில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவை தினசரி விமான சேவை ஆகும், மற்ற நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் விமான சேவை வழங்கி வருகிறது.
சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிராக இனவாதம் உள்ளதா? அமைச்சர் கே.சண்முகம் கூறிய பதில் என்ன தெரியுமா?
அதன்படி, சென்னை, சிங்கப்பூர் இடையே வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு IX 687 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.
கடைக்காரர்களே கவனம்! – சிங்கப்பூரர்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறுவதாக கூறிய அமைச்சர்
இந்த வழித்தட விமான சேவைக்கான வரும் ஜூலை முதல் அக்டோபர் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.