சென்னை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை அதிகரித்தது ஏர் இந்தியா நிறுவனம்!

Photo: Air India

சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம் (Air India).

இனி எப்படி நிம்மதியாக இருப்பது? சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை புலம்ப வைத்த அறிவிப்பு!

சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி ஒரு நேரடி விமான சேவையையும், சென்னையில் இருந்து டெல்லி, மும்பை வழியாக தினசரி நான்கு விமான சேவைகளையும் வழங்கி வருகிறது. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி வழியாக தினசரி மூன்று விமான சேவைகளையும், சென்னையில் இருந்து மும்பை வழியாக தினசரி இரண்டு விமான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த விமான சேவைகளை இரு மார்க்கத்திலும் வழங்கி வருகிறது விமான நிறுவனம். ஏர் இந்தியா நிறுவனத்தின் சென்னை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை எண்ணிக்கை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி இயக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான மலிண்டோ ஏர் விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த அனைத்து விமான சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.