ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது.
இந்திய ஊழியர் கண்டெய்னர்களுக்கு இடையே சிக்கி மரணம்: கனரக வாகன ஓட்டுநருக்கு சிறை
அந்த வகையில், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் வியாழன்கிழமைகளில் இரு மார்க்கத்திலும் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 688 என்ற விமானமும், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு IX 687 என்ற விமானமும் இயக்கப்படுகிறது.
இந்த விமான சேவைக்கான மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.