சிங்கப்பூருக்கு இணையாக சென்னையை மாற்ற தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இதையும் படிங்க : உலகளவில் ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர்..!
அச்சமயம் முதல்வர் பேசுகையில், தாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் இந்தியா விடுதலைக்கு பிறகு காங்கிரஸ் தான் இந்தியை திணிக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், தாய் மொழிக்காக உயிர்தியாகம் செய்த முதல் வீரர்கள் தமிழர்கள் தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதில் சிங்கப்பூருக்கு இணையாக சென்னையை மாற்ற தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு வூஹான் வைரஸ்…!
அதை தொடர்ந்து, இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று அவர் குறிப்பிட்டார்.