டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் (Air India), சென்னை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, நாள்தோறும் ஒரு நேரடி விமான சேவையையும், டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் வழியாக சிங்கப்பூருக்கு ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளையும் இரு மார்க்கத்திலும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
“சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகிறது”- எஸ்பி குழுமம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில், இந்தியாவில் தற்போது நவராத்திரி உள்ளிட்டப் பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ள நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் செல்ல பயணிகள் ஆர்வத்துடன் விமான பயண டிக்கெட் முன்பதிவுவை செய்து வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் இந்த வழித்தடத்தில் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் வெளியானது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’- திரையரங்குகளின் பட்டியல்!
அந்த வகையில், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in//என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.