சென்னையில் இருந்து சிங்கப்பூர் வர இருந்த பயணி ஒருவரின் பையில் ஏ.கே 47 தோட்டா இருந்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற கிஷோர் என்ற தமிழர் தனது குடும்பத்துடன் சென்னை விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ள வந்துள்ளார்.
சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் – அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
அப்போது அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர், அதில் அவர் மகன் பையில் ஏ.கே 47 தோட்டா ஒன்று இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரின் பயணத்தை ரத்து செய்து விசாரணை செய்தனர்.
அவர் அமெரிக்காவில் இன்ஜினியரிங் 3 ஆம் ஆண்டு படித்து வருவதாகவும், அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சிகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
இதனால் தவறுதலாக அவர் பையில் தோட்டா இருந்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்