சிங்கப்பூரில் ஒரே தம்பதிக்கு பிறந்த 4 குழந்தைகளுக்கும் பிறந்த நாள் செப். 6 – வியக்கவைக்கும் குடும்பம்

children-born-on-same-day-singapore-family
Berita Mediacorp

சிங்கப்பூர்: ஒரே குடும்பத்தில் தனித்தனி வருடங்களில் பிறந்த நான்கு குழந்தைகள் ஒரே நாளில் பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 4 குழந்தைகளும் செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று பிறந்ததாக கூறப்பட்டுள்ளது, இதனை கேட்கும் நமக்கே ஆச்சரியமாக இருந்தது.

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை

அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பிறந்த குழந்தைகள் இல்லை என்பது தான் வியப்பு.

49 வயதான சாலிஹின் அஹ்மத் பெர்பா மற்றும் 39 வயதான கைருன்னிசா அப்துல் கரீம் என்ற தம்பதியின் பிள்ளைகள் தான் அந்த நான்கு குழந்தைகளும்.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் செப். 6 ஆம் தேதி பிறந்த மூன்று பெரிய குழந்தைகளுக்கும் இடையேயான வயது வித்தியாசம் சரியாக இரண்டு வருடங்கள்.

அதாவது முதல் மூன்று குழந்தைகளுக்கும் வயது முறையே 8, 10 மற்றும் 12 ஆகும். இரண்டு வருட இடைவெளியில் ஒரே நாளில் பிறந்துள்ளனர்.

கடைசியாக அந்த தம்பதிக்கு பிறந்த நான்காவது குழந்தையும் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி பிறந்தது.

“இது எங்களுக்கே பெரிய ஆச்சரியம் இதை நாங்களும் எதிர்பார்த்தது இல்லை” என்று சாலிஹின் அஹ்மத் கூறினார்.

“எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ், அந்த தேதி இன்னும் மாறாததால் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்” என்றார்.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவருக்கு ஆறு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு