சிங்கப்பூரில் குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசிக்கு முன்பதிவு தேவையில்லை – இந்த நாட்களில் நேரடியாக செல்லலாம்

children-walk-in-vaccination
Facebook / Chan Chun Sing

சிங்கப்பூரில் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசிக்கு பெற்றோர்கள் இனி முன்பதிவுகளை செய்ய வேண்டியதில்லை.

நாளை செவ்வாய் (ஜன. 25) முதல் புதிய பொது ஏற்பாட்டின்கீழ், திங்கள் முதல் வியாழன் வரை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

சிலோசோ கடற்கரையில் பெண்களை தவறாக ரகசிய படம் எடுத்து சிக்கிய ஆடவர்.. கொந்தளித்த பெண்கள்!

இருப்பினும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக தேவை இருப்பதால், அந்த நாட்களில் முன்பதிவு தேவைப்படும்.

மற்ற நாட்களில் அதாவது திங்கள் முதல் வியாழன் வரை, 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு தேவையில்லை.

அதற்கு பதிலாக, அவர்கள் குழந்தைகளுக்கான 15 தடுப்பூசி நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் செல்லலாம், கண்டிப்பாக இரவு 7 மணிக்குள் வரவேண்டும்.

“அழகு சாதனப் பொருள்” என கடத்தப்படவிருந்த போதைப்பொருள் – சோதனையில் சிக்கிய 24 வயது பெண்