சித்திரை விழாவையொட்டி, சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ‘தமிழும் இசையும்’ நிகழ்ச்சி!

Photo: LISHA Official Facebook Page

லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம் என்றழைக்கப்படும் ‘லிஷா’ (Little India Shopkeepers And Heritage Association- ‘LISHA’) வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி சித்திரை திருநாளை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 8- ஆம் தேதி முதல் ஏப்ரல் 29- ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடுவானில் மதுபோதையில் ரகளை செய்த சிங்கப்பூர் பயணி… சென்னையில் தரையிறங்கிய விமானம்!

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை, பிர்ச் சாலையில் (Birch Road) உள்ள திறந்தவெளி அரங்கத்தில் ‘தமிழும் இசையும்’ என்ற நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் பங்கேற்கவிருக்கிறார்.

சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில், அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு ‘லிஷா’ கேட்டுக் கொண்டுள்ளது. சித்திரை விழா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.iny.sg/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.