சாக்லேட் பவுடருடன் தங்கத்தைக் கலந்து கடத்திய நபர் கைது!

Photo: Trichy Customs

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்டு வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செந்தோசா வானில் திடீரென தோன்றிய மர்மமான கருப்பு வளையம்: “என்னவா இருக்கும்” – குழப்பத்தில் பொதுமக்கள்

துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியிடம், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் வைத்திருந்த சாக்லேட் பவுடர் பாட்டில்களில் தங்கத்தைப் பொடியாக்கி நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சாக்லேட் பவுடர் உடன் இருந்த தங்கப்பொடியைப் பிரித்ததில் 211 கிராம் தங்கம் இருந்துள்ளது. இது மட்டுமின்றி 175 கிராம் எடைக்கொண்டத் தங்க செயின்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… முன் அனுமதி இல்லாமல் பொருளை கொண்டு வந்து பிடிபட்ட நபர்

இவற்றின் மதிப்பு 21 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தைக் கடத்தி வந்த நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.