சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு முன் அனுமதி இல்லாமல் எடுத்து வரப்பட்ட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மதிப்பு 74.19 லட்சம் ரூபாய் என்றும், அதனை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தமிழ்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதம் முனையில் பெண்ணை சிறைப் பிடித்த நபர் – வளைத்து பிடித்த போலீசார்
ஸ்கூட் விமானம் நேற்று (ஜன.08) சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது, அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த நபரை சந்தேகித்த அதிகாரிகள் அவரை சோதித்தனர். அப்போது அவரது உடமைக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்த சுமார் 80 ஆயிரம் அமெரிக்கா டாலர், 10 ஆயிரம் யூரோ வெளிநாட்டு பணம் கண்டறியப்பட்டது.
அதாவது சுமார் 74.19 லட்சம் ரூபாய் மதிப்புக்கொண்ட வெளிநாட்டு பணத்தை அவர் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் எடுத்து வந்ததாக அவர் பிடிபட்டார்.
இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#WATCH | Tamil Nadu: The customs department seizes foreign currency worth over Rs 70 Lakhs from a backpack at Tiruchirappalli International Airport earlier today
(Video Source: Customs) pic.twitter.com/NKNJDHUzrT
— ANI (@ANI) January 8, 2023
சிங்கப்பூர் வீராங்கனை 18 வயதில் மரணம் – இந்திய வீராங்கனையுடன் விளையாட இருந்தவருக்கு நேர்ந்த சோகம்!