‘கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் 2023’: திருச்சி- சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் பயணம் மேற்கொள்வதற்காக பயணிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று டிக்கெட்டுக்களை முன்பதிவுச் செய்து வருகின்றனர்.

வாகனம் மோதி சிறுவன் மரணம் – ஓட்டுனருக்கு சிறை, அனைத்து வகுப்பு ஓட்டுநர் உரிமமும் ரத்து

இதனால் சிங்கப்பூர்- திருச்சி வழித்தட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கான பயண டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சி, சிங்கப்பூர் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் https://www.airindiaexpress.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசிர் ரிஸில் தாக்குதல் சம்பவம்: 3 பேர் காயம் – ஒருவர் கைது

வருடாந்திர விடுமுறை, தொடர் பண்டிகைகள் உள்ளிட்டவை காரணமாக, பலரும் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.