பாசிர் ரிஸில் உள்ள கடை ஒன்றில் நடந்த கத்தி கொண்டு தாக்கிய சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, 61 வயதுமிக்க ஆடவர் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 20) கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் “2024 புத்தாண்டு வாணவேடிக்கை” – 14 இடங்களில் கொண்டாட்டம்.. முழுத் தொகுப்பு
பிளாக் 734 பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 72ல் இருந்து நேற்று மாலை 4.50 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் 53 வயதான ஆணும் 55 மற்றும் 53 வயதுடைய இரண்டு பெண்களும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
61 வயது ஆடவர் அரை மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருவருக்கொருவர் முன்னர் அறிந்தவர்கள் என்று தெரியவந்தது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம்