Circular சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் இரண்டு குழுக்கள் இடையே கலகம் ஏற்பட்டதை அடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் 20 முதல் 42 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கலவரம் மற்றும் மோசமான செயலில் ஈடுபட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
யிஷூனில் உள்ள குடியிருப்பில் தீ…6 பேர் மருத்துவமனையில் அனுமதி
இரண்டு குழுக்கள்
26 Circular சாலையில் அமைந்துள்ள தி மாஸ்க் உணவகம் மற்றும் பார் கடையில் இரண்டு குழுக்கள் சண்டையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில் தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தின் பின்னர் நடந்த வாக்குவாதத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டன. அதில் உணவகத்திற்குள் மேசைகள் மற்றும் நாற்காலிகள் கவிழ்ந்து கிடப்பதை காணமுடிகிறது.
சம்பவ இடத்தில் இருவர் கைது
காவல்துறை அங்கு வந்ததும், 24 மற்றும் 42 வயதுடைய இருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
காவல்துறை வருவதற்குள் மேலும் அங்கிருந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த வழக்கின் சாட்சியாக கத்தி ஒன்றை காவல்துறை கைப்பற்றியுள்ளனர்.
5 பேர் கைது
காவல்துறை அறிக்கை வெளியிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
நேரில் பார்த்தவர்கள் முன் வரலாம்
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவ மேலும் மூன்று ஆண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த தகவலை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதில் பெறப்படும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
பயணிகளின் COVID-19 சோதனை முடிவுகளை துரிதமாக சரிபார்க்க புதிய செயலி – SIA