தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 25) காலை 10.00 மணிக்கு சிங்கப்பூரின் உள்துறை அமைச்சரும், சட்டத்துறை அமைச்சருமான கா.சண்முகத்தைச் சந்தித்துப் பேசினார்.
அத்துடன், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் கா.சண்முகத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வேலையிடங்களில் புதிய நடவடிக்கைகள்
இந்த சந்திப்பின் போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.