தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 90 பேர் கைது

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூரில் தீவு முழுவதும் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் குற்றவாளிகள் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 15 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார் என்று CNB செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை…!

நேற்று வெள்ளிக்கிழமை முடிவடைந்த ஆறு நாள் சோதனை நடவடிக்கையில் பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு S$15,000க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஆங் மோ கியோ, பெடோக், ஜுராங் மற்றும் பொங்கோல் உள்ளிட்ட இடங்களில் CNB சோதனையை மேற்கொண்டது.

கைது செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருள் சந்தேக நபர்களிடமும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அது தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்குள் ரமலான் தொழுகைக்கு அனுமதி