போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை (செப். 26) நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் பிடிபட்டதாக CNB தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளில், S$790,000 மொத்த மதிப்புள்ள கிட்டத்தட்ட 13 கிலோ போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் 42 வயதான சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், குடியிருப்பு வீடுகளில் 40 வயது மற்றும் 31 வயதுடைய வெளிநாட்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இதில் மூன்று தீயணைக்கும் கருவிகளில் இருந்த போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான சந்தேக நபர்களிடம் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த 3,000க்கும் மேற்பட்டோர் கைது