கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம். இந்நிறுவனம், இந்த வழித்தடத்தில் நேரடி விமான சேவையை வழங்கவில்லை. எனினும், சென்னை, மும்பை வழியாக கோவைக்கும், சிங்கப்பூருக்கும் விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
விலைமாதுவை ஏமாற்றிய 49 வயது ஆடவர்-சிறையில் 7 வருடங்கள் தண்டனை பெற்றும் திருந்தாத குற்றவாளி
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு தினசரி மூன்று விமான சேவைகளை வழங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், ஒரு விமான சேவை, சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக கோவைக்கும், மற்ற இரண்டு விமான சேவைகளும் சிங்கப்பூரில் இருந்து மும்பை, சென்னை வழியாக கோவைக்கு என விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
அதேபோல், கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரண்டு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி, கோவையில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கு ஒரு விமான சேவையையும், கோவையில் இருந்து சென்னை, டெல்லி வழியாக சிங்கப்பூருக்கு மற்றொரு விமான சேவையையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
முடக்குவாதத்தில் முடங்கி இருப்பவரை தாக்கிய ஆடவர்; சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in//என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.