தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது?- விரிவான தகவல்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

தமிழகத்தின் திருச்சி மற்றும் கோவை ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகிறது ஸ்கூட் நிறுவனம் (Flyscoot). அதன்படி, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் A321neo என்ற விமானத்தை ஸ்கூட் நிறுவனம் இயக்கி வருகிறது.

“வெள்ளிக்கிழமை வந்துருவோம் ” – சிங்கப்பூரை நோக்கி துறைமுகம் வழியாக வரும் 50,000 கிலோ கோழிகள்

அதேபோல், கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை ஸ்கூட் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் A320neo என்ற விமானத்தைப் பயன்படுத்தி வருகிறது.

மரண தண்டனையை எதிர்த்து பட்டமளிப்பு விழாவில் காகிதத்தை காட்டிய மாணவர் – பொது ஒழுங்கை மீறினாரா !

கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கான விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.