“செக்ஸ், செக்ஸ், செக்ஸ்” என்று சிறுமியை துன்புறுத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை!

lightning strike 3 construction workers hospital
Pic: Getty Images

சிங்கப்பூரில் 13 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வெளிநாட்டு ஊழியருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 3) எட்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பள்ளி மாணவியை, மார்சிலிங் MRT நிலையத்தில் இருந்து அவரின் வீடு வரை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் 28 வயதான அந்த ஊழியர்.

பின்னர், ஹொசைன் முகமது அக்ரம் என்ற அந்த ஊழியரின் முயற்சிகள் தோற்றதும், அதனை தொடர்ந்து 16 வயதுமிக்க மற்றொரு சிறுமியை லிப்டில் பின்தொடர்ந்து துரத்தியுள்ளார்.

வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு

சிறுமி தன் வீட்டிற்குச் சென்று அவரது பிளாட்டின் கேட்டைப் பூட்டினாள், உடனே அங்கிருந்து தப்பி ஓடிய அவர் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கட்டுமான ஊழியராகப் பணிபுரிந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த ஹொசைன், சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரைத் துன்புறுத்தியதாகவும் தலா ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மற்றுமொரு அத்துமீறல் குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மூத்த சிறுமி தொடர்பாக அவர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை.

விசாரணையின் போது, ​​தனது மன அமைதிக்காக “செக்ஸ் உறவு கொள்ள” 13 வயது சிறுமியை பின் தொடர்ந்தாக அந்த ஊழியர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர் சிறுமியின் முழங்கையைப் பிடித்து, “செக்ஸ், செக்ஸ், செக்ஸ்” என்று கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

என்னாது…கோழி பொட்டலம் விலை S$72 வெள்ளியா…? சாக் ஆன வாடிக்கையாளர்கள் – விளக்கமளித்த FairPrice