சிங்கப்பூரில் உள்ள கிராஞ் சாலையில் (Grange Road) அமைந்துள்ளது இந்திய தூதரகம். சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கி வருகிறது. குறிப்பாக, விசாவைப் புதுப்பிப்பது, பாஸ்போர்ட் புதுப்பிப்பது, அவசர சான்றிதழ் (Emergency Certificates), ஓசிஐ அட்டைகள் (OCI Cards) உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், இந்திய தூதரகம் வழங்கி வரும் சேவையால் கடந்த ஜூன் மாதம் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? என்று குறித்த பட்டியலை அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 3,970 பேர் பாஸ்போர்ட் சேவையையும், 481 பேர் விசா சேவையையும், 534 ஓசிஐ அட்டை சேவையையும், 24 பேர் அவசர சான்றிதழ் சேவையையும் பெற்றுள்ளனர்.
இடம் மாறிய முகவரியை தெரிவிக்காத நபருக்கு S$3,700 அபராதம் – செலுத்தத் தவறினால் சிறை
மற்ற சேவைகளில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை மேலே உள்ள புகைப்படத்தில் பார்த்து அறிந்துக் கொள்ளலாம்.