COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 932 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு..!

Coronavirus: 932 new cases in Singapore on Friday, as total crosses 17,000
Coronavirus: 932 new cases in Singapore on Friday, as total crosses 17,000

சிங்கப்பூரில் நண்பகல் (மே 1) நிலவரப்படி, புதிதாக 932 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 17,101ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 5 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.