டாக்ஸி நிறுவனமான ComfortDelGro தன்னுடைய டாக்ஸி ஓட்டுனர்களுக்கு முழு வாடகை தள்ளுபடியை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது.
பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு, “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் நடவடிக்கை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 1,016 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி – மொத்தம் 10,000-ஐ தாண்டியது..!
புதன்கிழமை (ஏப்ரல் 22) அறிக்கையில், சமீபத்திய இந்த தள்ளுபடியின் செலவு சுமார் $17 மில்லியன் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
மேலும் தனது டாக்சி ஓட்டுநர்களுக்கு ComfortDelGro அளித்துள்ள நிவாரணத் திட்டத்தின் மொத்த மதிப்பு $116 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ComfortDelGro டாக்ஸி தலைமை நிர்வாகி ஆங் வெய் நெங் குறிப்பிடுகையில்: “சர்க்யூட் பிரேக்கர் காலம் மற்றொரு மாதம் நீட்டிக்கப்பட்டு, தற்போதுள்ள சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கப்படுவதால், டாக்ஸி ஓட்டுனர்கள் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கும், விடுதிகளுக்கு வெளியேயும் இனி செல்ல முடியாது..!