சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு 2,000- ஐ தாண்டியது!

Pic: Today

சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (24/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (24/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும், 2,079 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 2,070 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 2,030 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,510 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிஷிடா ஃபுமியோவுக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

கொரோனா பாதிப்பால் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 60 முதல் 83 வயத்துக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மொத்தம் 1,365 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 203 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 93 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

கடந்த நாளில் 2,275 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 366 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.