சிங்கப்பூரில் மேலும் 2,553 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (07/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (07/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 2,553 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 2,548 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சமூக அளவில் 2,343 பேரும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 205 பேரும், வெளிநாட்டு பயணிகள் ஐந்து பேரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,333 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு பாஸ்போர்ட்டில் கைமுறை முத்திரைகள் படிப்படியாக நிறுத்தப்படும் – ICA

கொரோனா பாதிப்பால் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 497 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,654 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 296 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 64 பேர் கவலைக்கிடமான நிலையில் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.

சிங்கப்பூரின் புதிய பயணத்தட திட்டத்தால், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

2,926 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 420 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.