சிறப்புத் தொகை S$400 வெள்ளி உங்கள் அக்கௌண்டில் செலுத்தப்பட உள்ளது, அதற்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.
ஏனெனில், 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைச் செலவினங்கள் (Cost-of-Living – COL) சிறப்பு செலுத்துதல் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் சுமார் 2.5 மில்லியன் வயது வந்த சிங்கப்பூரர்கள் S$400 வரை ரொக்கமாகப் பெற முடியும் .
அந்தரத்தில் உடைந்த கான்கிரீட் சுவர்… தொங்கு ஏணியில் சிக்கி தவித்த இரு ஊழியர்கள் – திக் திக் வீடியோ
நீங்கள் தகுதி உடையவரா?
பின்வரும் நிபந்தனைகளுக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், இந்த தொகை உங்களுக்கு தான்:
நீங்கள் 2023 இல் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரராக இருக்க வேண்டும்.
2022ஆம் ஆண்டிற்கான உங்கள் வருமானம் S$100,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் இருக்க கூடாது.
தகுதியுடையோர் வருமானத்தைப் பொறுத்து S$200 முதல் S$400 வரை பெறலாம்.
தகுதியுடைய 10 வங்கிகளில் உங்களுக்கு கணக்குகள் இருந்தால், வரும் மே 23க்குள் தங்கள் NRIC-ஐ PayNow உடன் இணைக்க நாட்டு குடிமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஜூன் மாதம் முதல் பணம் செலுத்தும் பணி நடைபெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
திருச்சி to சிங்கப்பூர்.. விமானத்தில் கோளாறு – என்ன நடந்தது ?