கிளினிக் ஒன்றை உடைத்து உள்ளே நுழைந்து இருமல் மருந்தை திருடிய சந்தேகத்தில் ஆடவர் கைது

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

லோராங் 1 தோ பாயோவில் உள்ள கிளினிக் ஒன்றில் நுழைந்து இருமல் மருந்தை திருடியதாக 37 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கடந்த மே 14 அன்று மாலை 5.20 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் மே மாத இறுதிவரை அதிக வெப்பமான நாட்களை எதிர்பார்க்கலாம்

அதாவது, S$232.80 மதிப்புள்ள நான்கு இருமல் மருந்து பாட்டில்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் மூலம், டாங்ளின் காவல் பிரிவு அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்து, அவரை கைது செய்தனர்.

அந்த ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் வீட்டை உடைத்தல் மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூருக்குள் நுழைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை விதிக்கலாமே? என்ற கேள்விக்கு மனிதவள அமைச்சத்தின் பதில்