சிங்கப்பூரில் மிக அதிக எண்ணிக்கையாக ஒரே நாளில் 626 பேர் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்..!

MOH said an additional 626 patients have been discharged
MOH said an additional 626 patients have been discharged (Photo: iStock)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 626 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 12) குறிப்பிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தினசரி குணமடைவோர் எண்ணிக்கையில் ஆக அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துவாஸ் கிடங்கில் தீ; சுவர்கள் இடிந்து விழுந்து நாசம்..!

அதாவது மொத்தம் 3,851 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 1,132 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 19,667 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : பீஷானில் பல்வேறு காயங்களுடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரண்டு பேர் கைது..!