சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 14) COVID-19 காரணமாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.
70 வயதான சிங்கப்பூர் ஆடவர் இதில் உயிரிழந்தார். இவர் சாஃப்ரா ஜுராங் (SAFRA Jurong) குழுவுடன் தொடர்புடையவர்.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக மேலும் 334 பேர் பாதிப்பு – மொத்தம் 3,000ஐ தாண்டியது..!
சிங்கப்பூரில் சம்பவம் 128ஆக பட்டியலிடப்பட்ட இவருக்கு, மார்ச் 6ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தொற்று நோய்களுக்கான தேசிய மையம் (NCID) அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது.
மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்று MOH தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை தற்போது 10ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : “சிங்கப்பூரில் உங்களின் கடின உழைப்பிற்கு நன்றி ” – தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமைச்சர் ஜோசபின் தியோ..!