COVID-19 தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சில நைட் கிளப்கள் மற்றும் இசைக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான முன்னோடித் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமூக கிருமித்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில், அடுத்த அறிவிப்பு வரும் வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய விமான நிறுவனங்களின் தரநிலை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு உயரிய வைர மதிப்பீடு!
இதனை உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) அறிவித்தன.
சில நைட் கிளப்கள் மற்றும் இசைக்கூடங்கள் போன்ற அதிக தொற்று ஆபத்துள்ள இடங்களில் மேலும் சமூக அளவில் பரவும் மற்றும் குழுமங்கள் உருவாகும் அபாயத்தைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு, மக்கள் நீண்ட நேரம் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்க மறு அறிவிப்பு வரும் வரை முன்னோடித் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சுகள் கூட்டு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளன.
நைட் கிளப்கள் மற்றும் இசைக்கூடங்கள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கான முன்னோடித் திட்டம் இந்த மாதத்தில் தொடங்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.