பாலர்பள்ளிகளில் புதிய கட்டுப்பாடுகள், தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை

(photo: mothership)

பாலர்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதிதாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாலர்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ சம்மந்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலோ, கொரோனா சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவர்களாக இருந்தாலோ அல்லது தனிமை படுத்தப்பட்டவர்களாக இருந்தாலோ குறிப்பிட்ட ஊழியர்களுக்கும்
மாணவர்களுக்கும் தற்காலிக விடுப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

முறையாக சிகிச்சை பெற்று அவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பிய பின்னரே பள்ளிக்கு திரும்ப ஊழியர்களையும், மாணவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என சிறார் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.