வளர்ப்பு மகளை வன்கொடுமைச் செய்த தந்தைக்கு சிறை!

indian-origin-singapore-jailed

 

தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

திருச்சி- சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து உச்சத்தைத் தொட்டது!

கடந்த 2015- ஆம் ஆண்டு சிறுமியுடன் இருந்த பெண்ணை இந்தோனேசியாவின் பாத்தாம் நகரில் ஆடவர் திருமணம் செய்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது குடும்பத்துடன், அந்த ஆடவர் சிங்கப்பூரில் குடியேறினார்.

2017- ஆம் ஆண்டு செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று சிறுமியின் தாயாருக்கு வழக்கு ஒன்றில் 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிறைக்கு செல்லும் முன், தனது கணவரிடம் நமது மகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்த நிலையில், தனது வளர்ப்பு மகளை 10 வயது 13 வயது வரை அந்த ஆடவர் பாலியல் துன்புறுத்தலையும், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு தற்கொலைக்கு செல்லும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது.

மலேசியாவில் உலகத் தமிழ் மாநாடு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுமியின் தந்தை தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். தற்போது 50 வயதாகும் அந்த ஆடவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.