சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக பணியிடங்களில் உயிரிழப்பு அதிகமாக நிகழ்கின்றன.இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
அனுபவமற்ற தொழிலாளர்கள்,வேலைக்கு புதியவர்கள் இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப் படுவதால்,பணியிட இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று சிலர் எண்ணலாம்.ஆனால்,நல்ல அனுபவம் வாய்ந்தவர்களே அதிகமாக பணியிட விபத்துகளில் மரணித்துள்ளனர்.
பணியிட மரணங்கள் பயிற்சி அல்லது அனுபவ அளவைச் சார்ந்தது இல்லை என்பது இதிலிருந்து புலப்படுவதாக ஊடகங்களுடனான நேர்காணலில் அமைச்சர் டான் கூறினார்.வேலைச்சுமை அதிகமான காலத்தில் வேலைகளை வேகமாகச் செய்ய முற்படுவது பணியிட மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
பணியைத் தொடங்கும் முன் வேலையிட அபாயங்களை மதிப்பீடு செய்வது குறித்த திட்டங்களை பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.