ஒரு வாரம் சடலமாக கிடந்த ஊழியர் – கடும் துர்நாற்றம் வீசியதால் கண்டுபிடிப்பு

Decomposing body of delivery driver found Upper Changi
Shin Min Daily News

சிங்கப்பூரில் 34 வயது மதிக்கத்தக்க ஆடவர் சடலம் ஒன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது.

அப்பர் சாங்கி சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ கார்டன்ஸ் அருகே உள்ள அடுக்குமாடி வீட்டு கார் பார்க்கிங்கில் நின்ற காரில் அந்த சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

“சிங்கப்பூரில் அமோக வேலை” – ஏமாந்து நிர்கதியாய் நின்ற தமிழ்நாட்டு ஊழியர்

வாகனத்தின் அருகே கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அப்பர் சாங்கி சாலையில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) உறுதிப்படுத்தியது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் சதிச்செயல் ஏதும் குறித்து சந்தேகிக்கவில்லை.

சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முன் சுமார் 1 வாரம் உள்ளே இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபர் டெலிவரி ஊழியர் என்பதை இறந்தவரின் உறவினர்கள் ஷின் மின்னிடம் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்