தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பிரபல நிறுவனம்… உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பிரபல நிறுவனம்... உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: Hanshika Engineering & Constructions Facebook Page

 

 

சிங்கப்பூரில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களில் ஒன்று ஹன்ஷிகா பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம் (Hanshika Engineering & Constructions). தீபாவளி பண்டிகையையொட்டி, வெளிநாட்டு ஊழியர்களுடன் கொண்டாட முடிவுச் செய்த அந்நிறுவனம், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வரும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்!

அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 11- ஆம் தேதி நடைபெற்ற தீபாவளிப் பண்டிகை கொண்டாடட்டத்திற்கான நிகழ்ச்சியில் ஹன்ஷிகா பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 50- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, நிறுவனம் வழங்கிய அனைவருக்கும் ஒரே மாதிரியான வேஷ்டி, சட்டைகளை அணிந்திருந்தனர்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பிரபல நிறுவனம்... உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: Hanshika Engineering & Constructions Facebook Page

தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். பின்னர் சாமிக்கு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், அனைத்து ஊழியர்களுக்கும் இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள், ரொக்கம் மற்றும் நீர் சூடேற்று சாதனம் ஆகியவை வழங்கப்பட்டது.

பின்னர் வெளிநாட்டு ஊழியர்கள், நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மத்தாப்புகளைக் கொழுத்தி தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பிரபல நிறுவனம்... உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: Hanshika Engineering & Constructions

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கௌரி நோன்பு விரத பூர்த்தி விழா!

இதனிடையே, ஊழியர்களின் பெயர்களைப் போட்டு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்களும், மற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிரைண்டர், செல்போன், தொலைக்காட்சி ஆகியவையை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.